உத்தரப்பிரதேசத்தில் தலித் பெண்ணை சரமாரியாக தாக்கிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் திருடியதாக குற்றம் சாட்டி தலித் சிறுமியை குடும்பத்தினர் தாக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் சிறுமியின் கைகளை இரண்டு நபர்கள் பிடித்து இருக்க ஒருவர் நீண்ட குச்சியால் சிறுமியை சரமாரியாக தாக்குகிறார். மேலும் சிறுமியின் முடியை பிடித்து ஆட்டுகிறார்.
இந்த வீடியோ சமூகவலை தளங்களில் வைரலானதை தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.